×

நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க கோரிக்கை தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை, மார்ச்4: புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட சில மாணவிகள் சிலம்பம் சுற்றிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் புதுக்கோட்டையில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி, பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக சென்று டவுன்ஹாலில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் தமிழ்மொழி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

Tags : closure ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...