×

பிளஸ்1 தேர்வு இன்று துவக்கம் 19,616 மாணவர்கள் எழுதுகின்றனர்

புதுக்கோட்டை, மார்ச்4: பிளஸ்1 தேர்வு இன்று துவங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 மையங்களில் 19,616மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 528 மாணவ மாணவிகளும், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 488 மாணவ, மாணவிகள் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 616 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொது தேர்வை எழுத உள்ளனர். இதற்காக அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையங்கள், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்கள், இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 84 தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொது தேர்வினை எழுத உள்ளனர். பிளஸ்-1 பொது தேர்வு இன்று (புதன்கிழமை) தமிழ் முதல் தாளுடன் தொடங்கி வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags :
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்