×

அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் தொழிலாளர்கள் சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து பெண்கள் உள்பட 6 பேர் காயம்

அரவக்குறிச்சி, மார்ச் 4: அரவக்குறிச்சி அருகே டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர்கள் சென்ற வேன் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அரவக்குறிச்சியை அடுத்த டெக்ஸ்டைல் பார்க்கிலுள்ள ஒரு ஜவுளி நிறுவனத்திற்கு டைலரிங் உள்ளிட்ட வேலைக்காக கிராமத்திலிருந்து தொழிலாளர்களை ஏற்றி வருவது வழக்கம். இதே போல நேற்று அரவக்குறிச்சியை அடுத்த சூரிப்பாளி என்ற கிராமத்திலிருந்து 11டெக்ஸ்டைல் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி வேன் மீது மோதியது. இதில் வேனிலிருந்த பிரியங்கா(21), கலாராணி(38), ராஜேஸ்வரி(36), கண்ணம்மாள் (50), வெங்கடேசன்(20), ராகவன்(21) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : women ,Tex ,Aravakurichi ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ