×

கூலித்தொழிலாளி தற்கொலை

வருசநாடு, மார்ச் 4: தங்கம்மாள்புரம் அருகே, வயிற்று வலியால் விவசாயி பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தங்கம்மாள்புரம் அருகே, கோயில் பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சதுரகிரி (30). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அங்கு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்த சதுரகிரி வீட்டில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு, கோவில்பாறை கிராமம் அருகே உள்ள மூங்கிலாறு பாலத்தின் அருகே இறந்து கிடந்தார். கிராம மக்கள் தகவலின்பேரில் கடமலைக்குண்டு சப்இன்ஸ்பெக்டர் அருண்பாண்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : suicide ,mercenary ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...