×

குன்னூர் நகராட்சி குடியிருப்புகளில் வாடகை செலுத்தாத வீடுகளுக்கு சீல்

குன்னூர், மார்ச் 4: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் நகராட்சி ஊழியர்களுக்கு 60ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது குடியிருப்பு பகுதியில் வாடகை மற்றும் குடிநீர் கட்டணம் நகராட்சிக்கு முறையாக செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும்  நடவடிக்கை எடுத்தனர். குறிப்பாக டென்ஹில், மாடல் ஹவுஸ், வேளாங்கண்ணி நகர், வண்ணார்பேட்டை போன்ற பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடந்த 3 வருடமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாததால் 48 லட்ச ரூபாய் வரை நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் வாடகை கட்டாத குடியிருப்புகளின் குடிநீர் துண்டிக்கவும் மற்றும் குடியிருப்புகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.  

இதன் பேரில் நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு சென்றனர். இது குறித்து கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து. இது போன்று முறையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வருவதால் குன்னூர் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் நிலுவை மற்றும் குன்னூர் பகுதியில் நகராட்சி சார்பாக  எந்த ஒரு நலத்திட்டங்களும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது  குன்னூர் மவுண்ட் பிளசண்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் வாடகை கட்டாத குடியிருப்பு வீட்டிற்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் டென்ட்ஹில் பகுதியில் மூன்று வீடுகளின் குடி நீர் துண்டிக்கப்பட்டது. மேலும் குன்னூர் நகராட்சியில் இது போன்ற வாடகை செலுத்தாத குடியிருப்புகளுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : houses ,Coonoor Municipal Residences ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்