×

பந்தலூர் அருகே பழுதடைந்த நடைபாதையால் பாதிப்பு

பந்தலூர், மார்ச்  4: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி விலங்கூர் அரசு பள்ளி ஜங்சனில் இருந்து பழனிவேல் என்பவர் வீடு வரை செல்லும் நடைபாதை கடந்த பல வருடங்களுக்கு முன் போடப்பட்டது. தற்போது  அந்த சிமென்ட் நடைபாதை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெலாக்கோட்டை ஊராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, பழுதடைந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : sidewalk ,Bandalur ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா