×

திண்டுக்கல் ரமணாஸ் ஏபிசி கல்லூரி வளாக தேர்வில் 67 பேர் வெற்றி

திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் ரமணாஸ் ஏபிசி கல்லூரியில் நடந்த வளாக தேர்வில் 67 பேர் வெற்றியடைந்து பணி நியமன ஆணை பெற்றனர். திண்டுக்கல்  ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நீல் மெட்டல் புரோடக்ட்ஸ் லிமிடெட் சார்பில் வளாக தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 95 மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப சுற்று, மனிதவள மேம்பாட்டு சுற்று என இரண்டு கட்டங்களாக நேர்முக தேர்வு நடந்தது. இதில் திறம்பட செயலாற்றி 67 மாணவர்கள் வெற்றி பெற்றனர். மனிதவள மேம்பாட்டு முதுநிலை நிர்வாகி சரவணன் அடங்கிய அணியினர் நேர்முக தேர்வை நடத்தினர். கல்லூரி முதல்வர் மணிவண்ணன், நிர்வாக அலுவலர் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்வி, பயிற்சித்துறை அலுவலர் விவேக் செய்திருந்தார்.

Tags : Dindigul Ramanas ,ABC ,
× RELATED தொகுதிகளை ஏ.பி.சி.யாக பிரித்து...