×

சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர் உள்பட 23 பேர் மீது வழக்குபதிவு

ராசிபுரம், மார்ச் 3: வெண்ணந்தூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர் உள்பட 23 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அலவாய்ப்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர், நேற்று  முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். அவரது உடலை  அடக்கம் செய்ய  தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கொண்டு செல்ல,  தாசன்காடு ஊர் பொதுமக்கள் முயற்சி செய்தனர். அந்த நிலத்தின் உரிமையாளர் சசிக்குமார், வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சமரசம் பேசினர். இதை  ஏற்காத ஊர் பொது மக்கள் ஆதித்தமிழர் பேரவை மணிமாறன்,  கம்யூனிஸ்ட் கட்சி செங்கோட்டுவேல் தலைமையில், வெண்ணந்தூர் காவல்  நிலையம் எதிரே, ராசிபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கற்களை கொண்ட சாலையை மறித்ததுடன், அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்களை மறித்து தாக்க முயன்றனர். மேலும், போலீசாரை அவதூறாக பேசினர். இதுகுறித்து வெண்ணந்தூர்  கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி, கொடுத்த  புகாரின் பேரில், எஸ்ஐ மணிமாறன் அரசு பஸ் டிரைவர் கதிர்வேல், செல்வம், மலர்கொடி, மல்லிகா, செந்தாமரை, வனிதா, தீபா, மலர்,  மஞ்சு, சீனிவாசன் உள்ளிட்ட  23 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.

Tags : State bus driver ,
× RELATED சேடபட்டி அருகே அரசு பஸ் டிரைவருக்கு...