×

கராத்தே போட்டி தரகம்பட்டி அருகே வரணையில் காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கடவூர், மார்ச் 3: தரகம்பட்டி அருகே உள்ள வரவணையில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தரகம்பட்டி அருகே வரவணை பெருமாள்கோவில் மேல்புறம் உள்ள குளத்தின் அருகே உள்ள சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் காடுகள் உள்ளது. இங்கு கருவேல மரங்கள் மற்றும் ஏராளமான மரக்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது. காட்டுப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதனை கண்டபொதுமக்கள் உடனடியாக குஜிலியம்பாறை தீயைணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலை அலுவலர் மருதை தலைமையிலான போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து காட்டுத்தீயை போராடி அணைத்தனர். இதனால் சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் நன்கு வளர்ந்திருந்த சீமைகருவேல மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் தீயில் எரிந்து சேதமானது.

Tags : Wildfire fire fighters ,Karate Tournament ,
× RELATED பெண்களுக்கு பாலின சமத்துவம் அவசியம்...