×

விவசாயிகள் வங்கி பாஸ் புத்தகம், ஆதார் நகல் எடுத்து வரவேண்டும்

கடலூர், மார்ச் 3:   கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வரும் விவசாயிகள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகல் எடுத்து வர வேண்டுமென கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் ஆனந்த் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரொக்க பண பரிவர்த்தனையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை நடைமுறை படுத்தும் நோக்கில் விரைவில் மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வேளாண் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு உரிய தொகை இனிவரும் நாட்களில் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

எனவே, விற்பனைக்கு பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தவறாமல் எடுத்து வந்து விற்பனைக்கூட அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். இதன் மூலமாக, விவசாயிகளின் கணக்குகள் பராமரிக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் நடைமுறை நடப்பு மாதம் முதலே அமல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டுமென தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு