×

இளைஞர் இயக்கம் கோரிக்கை பைக் மீது கார் மோதல் தொழிலாளி பலி

பாடாலூர், மார்ச் 3:  ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி  மீது  கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரம்பலூர் அருகேயுள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் திருப்பதி (35). கூலித் தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான பைக்கில் ஆலத்தூர் தாலுகா இரூர் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் திருப்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பகுதியை சேர்ந்த இளமுருகன் மகன் இளமாறன் என்ற கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car collision worker ,
× RELATED லாரி மீது கார் மோதி தொழிலாளி பலி