பொன்னமராவதி,மார்ச்3: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டியில் ஆர்எஸ்பதி காட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். கேசராபட்டியைச்சேர்ந்தவர் ராமசாமி மனைவி அன்னம் விவசாயி. இவருக்குச்சொந்தமான ஆரஸ்பதி காட்டில் திடீர் என தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.