வெள்ளகோவில், மார்ச் 2:முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1262 கிலோ தேங்காய் பருப்புகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.102.70க்கும், குறைந்த விலையாக ரூ.45.10க்கும் ஏலம் போனது. மொத்தம் 1262 கிலோ அளவுள்ள தேங்காய் பருப்பு 1 லட்சத்து ஆயிரத்து 293 ரூபாய்க்கு விற்பனையானது என்று விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.