×

வில்லிவாக்கத்தில் பரபரப்பு கை, கால்களை கட்டிவைத்து சகோதரிக்கு பாலியல் தொல்லை

சென்னை, மார்ச் 2: வில்லிவாக்கத்தில் தனது சொந்த சகோதரியின் கை, கால்களை கட்டிவைத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சகோதரனை போலீசார் கைது செய்தனர்.வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;எனது தந்தையும், தாயும் குடும்பத்தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர். எனக்கு 15 வயதில் ஒரு சகோதரன் இருக்கிறான். என் தாய் வேறொருவரை 2வது திருமணம் செய்து, அதே பகுதியில் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் எங்கள் வீட்டில் நானும் சகோதரனும் வசித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக எனது கை, கால்களை கட்டி போட்டு, எனது சகோதரன் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தார். அவரிடம் இருந்து தப்பிவந்துள்ளேன். எனவே, சகோதரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், போலீசார் விசாரித்து அதே பகுதியில் தலைமறைவாக இருந்த சிறுமியின் சகோதரனை நேற்று முன் தினம் மாலை பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், சகோதரியை கட்டி வைத்து பலமுறை பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் சகோதரனை கைது செய்தனர். பின்னர் சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீசில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.


Tags : sister ,
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’