×

பள்ளி அருகே இருந்த ஆபத்தான குழி மூடும் பணி தொடக்கம்

தேவகோட்டை, மார்ச் 2:  தினகரன் செய்தி எதிரொலியாக தேவகோட்டை பள்ளி அருகே இருந்த ஆபத்தான குழி மூடப்பட்டு வருகிறது.
தேவகோட்டை அரசு மருத்துவமனை மற்றும் 16 வது தொகுதி நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் குடிநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கு வால்வு பழுதிற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் நீர் நிறைந்து காணப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவியர் தவறி விழுந்து ஆபத்தில் சிக்கும் அபாயம் நிலவியது. இது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தேவகோட்டை நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்தது. பள்ளத்தை மூடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு இருந்த ஆபத்து விலகியுள்ளது.

Tags : school ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...