×

மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி

சிவகங்கை, மே 10: சிவகங்கை அருகே திருவேலங்குடி பகுதியில் ராமநாதன் தோட்டத்தில் ராமர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன. அதே இடத்தில் வேலை பார்த்த ஏலம்மாள், சரளா ஆகியோர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீகள் விசாரித்து வருகின்றனர்.

The post மின்னல் தாக்கி 6 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Ram ,Ramanathan ,Thiruvelangudi ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்