×

சேந்தமங்கலத்தில் விவசாயி தற்கொலை

சேந்தமங்கலம், மார்ச் 2: சேந்தமங்கலம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம்(55). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்த செல்வம், பல்வேறு இடங்களில்  சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதில், மனமுடைந்த செல்வம், விளைநிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...