×

பழநி சண்முகா நதியில் அமலைச் செடிகளை அகற்றிய தன்னார்வலர்கள் பேஸ்புக்கில் ஒன்றிணைந்து அசத்தல்

பழநி, மார்ச் 2: பழநி சண்முகா நதியில் படர்ந்துள்ள அமலைச்செடிகளை அகற்றும் பணியில் பேஸ்புக் மூலம் ஒன்றிணைந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சண்முகாநதியில் குளித்து விட்டுச் செல்வது வழக்கம். புனித நதியான சண்முகாநதி ஆற்றில் தற்போது அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பக்தர்கள் குளிக்க முடியாமல் அவதியடைந்து வந்தனர்.

Tags : Volunteers ,plants ,Palani Shanmuga River ,
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்