×

வழக்குகளில் உரிமம் கோராத 641 வாகனங்கள் நாளை ஏலம்

திருவள்ளூர், மார்ச் 1: திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. அரவிந்தன் விடுத்துள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் 5 சப்-டிவிஷனுக்குட்பட்ட 25 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட உரிமம் கோரப்படாத வாகனங்கள் ஏலம் விட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் திருவள்ளூர் கிளை மேலாளர் ஆகியோரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே.  நாளை ( 2ம் தேதி) திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் 584, நான்கு சக்கர வாகனங்கள் 57 என மொத்தம் 641 வாகனங்கள் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் திருவள்ளூர் வட்டாட்சியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : auction ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்