இளையான்குடி, மார்ச் 1: இளையான்குடி அருகே நகரக்குடியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், ஒன்றியப் பெருந்தலைவர் முனியாண்டி, ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் நல வாரியத் துறை துறை அமைச்சர் பாஸ்கரன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முகாமில் நகரகுடி, ஆழி மதுரை, அதிகரை குமார குறிச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு, கண் பார்வை மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் குழு சார்பில் சரிவிகித உணவு குறித்த கண்காட்சி வைக்கப்பட்டது. டாக்டர்கள் செல்வ மலதி, பரத் தாமோதரன் குழுவினர் சார்பில் முகாமில் 874 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நான்கு பேருக்கு கண் கண்ணாடிகளும், ஐந்து பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. முகாமில் ஒன்றிய துணைத்தலைவர் ஒன்றிய துணைத்தலைவர் தனலட்சுமி, கவுன்சிலர்கள் முருகன், சீமைச்சாமி, உஷாராணி ராஜா, சண்முகம், மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன் தமிழ்ச்செல்வன் மனோஜ் பிரபாகர் பிச்சை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.