×

திருமாநிலையூரில் சென்டர் மீடியன் அகற்றப்பட்டும் சாலை பணி துவங்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், பிப். 27: சென்டர் மீடியன் அகற்றப்பட்டும் சாலைப் பணியை துவக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் திருமாநிலையூர் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் திருமாநிலையூர் கரூர் திருமாநிலையூரில் இருந்து சுக்காலியூர் மதுரை பைபாஸ் சாலை வரை சாலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி மேற்கண்ட சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் சிமெண்டு தடுப்புகள் அகற்றப்பட்டு சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன . பல நாட்களாக சாலை தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை சென்று வரும் பிரதான சாலையாக உள்ளதால் இரவு நேரத்தில் சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். மீண்டும் சிமெண்டு சாலை தடுப்பு சென்டர் மீடியன்களை உரிய இடத்தில் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Motorists ,road ,removal ,Thiruvananthapuram ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை