×

டெல்லி கலவரத்தை கண்டித்து உத்தமபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம், பிப்.27: உத்தமபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் டெல்லி காவல்துறையை கண்டித்தும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது நடந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கலவரத்தை கட்டுப்படுத்தாத காவல்துறையை கண்டித்தும் உத்தமபாளையம் பைபாஸ்சாலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு துணைதலைவர் கல்பத்துல்லாகான் தலைமை தாங்கினார்.

செயற்குழு உறுப்பினர் ரசூல்மைதீன் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தலைவர் அபூபக்கர்சித்திக், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் யாசர்அராபத், ம.ம.க. மாவட்ட தலைவர் அப்பாஸ்மந்திரி, அரசியலமைப்பு சட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கமர்தீன், மாவட்ட சமூக ஊடகத்துறையின் சதாம்உசேன் உள்ளிட்டோர் பேசினர். துணை செயலர் ரியாஷ்தீன் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,Uthamapalayam ,Delhi ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!