×

ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை, பிப். 25: பூக்கடை ரத்தன் பஜார் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு இந்த ஏடிஎம் மெஷினை உடைப்பது போல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.  இதுகுறித்து பூக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, ஒரு ஆசாமி கார்டு மூலம் பணம் எடுக்க முயன்று, பணம் வராததால்  மெஷினை உடைப்பது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து  விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...