×

லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் லட்சார்ச்சனை மகா யாகம் 19ம் தேதி நடக்கிறது

நாமக்கல், பிப்.17: நாமக்கல் ராமாவரம் புதூரில் சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர் கோயில் அமைந்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ஹயகிரீவர் சுவாமிக்கு சிறப்பு மகா யாகம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் 19ம் தேதி(புதன்கிழமை)காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி அபிவிருத்திக்காக, சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி காலை 8:30 மணி முதல் மகா யாகமும், தொடர்ந்து 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

லட்சார்ச்சனை மற்றும் மகா யாகத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவ- மாணவியர் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Tags : Lakshmana Maha Yagam ,Lakshmi Hayagriver Temple ,
× RELATED தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு