×

செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பித்தளை பொருட்கள் திருட்டு

அரியலூர், பிப்.17:செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து பித்தளை பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொட்டவெளி கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை கோயில் பூசாரி முருகேசன் வந்து பார்க்கையில் கோயில் பூட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கோயிலின் உள்ளே இருந்த உண்டியலை உடைத்துள்ளர். ஆனால் உண்டியல் திருவிழா அன்றே திறந்து பணம் எடுக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த திருடர்கள் கோவிலில் இருந்த குத்துவிளக்கு, சாமியின் கவரிங் நகைகள், மணிகள் மற்றும் பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Theft ,Senturai ,temple shop ,
× RELATED நத்தம் அருகே செந்துறையில் புனித...