×

கரூர் ராமானூரில் சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்க மக்கள் கோரிக்கை

கரூர், பிப்.17: பழுதடைந்த சின்டெக்ஸ்தொட்டியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.
கரூர் ராமானூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு குடிநீர்விநியோகம் செய்யப்பட்டுவந்தது. பழுது காரணமாக தற்போது தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. தொட்டி வைத்துள்ள சிமெண்ட மேடை பராமரிப்பின்றி சிதிலமடைந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சின்டெக்ஸ்தொட்டி அமைக்கும்போது ஒப்பந்தக்காரர்கள் சரியாக அமைத்துள்ளார்களா என அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. கடமைக்கு தொட்டிகட்டி சின்டெக்ஸ் தொட்டியை வைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.
அதன்பின்னர் உள்ளாட்சித்துறையினர் அதனை பராமரிப்பதும் இல்லை. ஒருசில ஆண்டுகளிலேயே செயல்படாமல் போய்விடுகிறது. இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து கோடைகால தண்ணீர் தேவையை எதிர்பார்த்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur Ramanur ,
× RELATED கரூர் ராமானூர் இபி காலனியில் சாலையோர குப்பைகளை எரிப்பதை நிறுத்த கோரிக்கை