×

கரூர் ராமானூர் இபி காலனியில் சாலையோர குப்பைகளை எரிப்பதை நிறுத்த கோரிக்கை

கரூர், மார்ச் 10: கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானூர் இபி காலனி செல்லும் சாலையில் குப்பைகள் தீயிட்டு கொளுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமானூர் பகுதியில் இருந்து இபி காலனி மற்றும் வடக்கு காந்தி கிராமம் செல்லும் சாலையோரம் அவ்வப்போது குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஒரே இடத்தில் கொட்டி அகற்றப்படாமல் அங்கேயே எரிக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, புகை வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதோடு, பகுதி மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குப்பைகளை எரிக்காமல் அங்கிருந்து அகற்றி, குப்பை கிடங்கில் கொட்ட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Karur Ramanur EP Colony ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...