×

ஊத்தங்கரை அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி

ஊத்தங்கரை, பிப்.13:ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையம்பதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி(எ) சென்னன்(38). இவருக்கு சகுந்தலா(30) என்ற மனைவியும், விஜயபிரியா(9), சர்மா(7) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், சென்னன் படதாசம்பட்டி அருகே உள்ள விவசாய நிலத்தில் பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சாமல்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Oothangarai ,
× RELATED குழந்தையுடன் பெண் கடத்தல்