×

குழந்தையுடன் பெண் கடத்தல்

ஊத்தங்கரை, மே 10: ஊத்தங்கரை அடுத்த கொட்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(34), கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கவி(20). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 6ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற சங்கவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், ஊத்தங்கரை போலீசில் சிலம்பரசன் புகார் தெரிவித்தார். அதில், கொட்டாரப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தவேல் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post குழந்தையுடன் பெண் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Oothangarai ,Silambarasan ,Kotarapatti ,Sangavi ,Sanghavi ,
× RELATED சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு...