×

அண்ணா நகர் வளைவு அருகே மலைபோல் குவிந்துள்ள குப்பையால் சுகாதார கேடு

கரூர்,பிப்.13: கரூர் அண்ணா நகர் வளைவு பாதையோரம் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் அகற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதி சாலையில் இருந்து இடதுபுறம் அண்ணா நகர் பகுதிக்கான சாலை பிரிகிறது. இந்த சாலையோரம் பயன்படாத நிலையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இதனருகே, இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் கொட்டப்பட்டுள்ளன. இதனால், பகுதி முழுதும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகின்றன. குப்பைகள் மீது கால்நடைகளும் சுற்றித்திரிவதாலும் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அவ்வப்போது அள்ளுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : hills ,Anna Nagar ,
× RELATED தகிக்கும் மலைகளின் அரசி:...