×

கொரோனா பாதிப்பு எதிரொலி பன்றிக்கறி, ஆட்டு ரத்தம் சாப்பிட வேண்டாம் ஈரல், குடலையும் கொஞ்சநாள் நிறுத்த டாக்டர்கள் அறிவுரை

தேனி, பிப். 12:  தேனி மாவட்டத்தில் சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 20 பேர் 28 நாட்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட மக்கள் பன்றிக்கறி, ஆட்டு ரத்தம், ஈரல், குடல் போன்றவற்றை சாப்பிடுவதை சில மாதங்களுக்கு நிறுத்துமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் தாயகம் திரும்பி உள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை இவர்களின் பட்டியலை சுகாதாரத்துறைக்கு அனுப்பி இவர்களை 28 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்குமாறும், 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த 20 பேரை தேனி மாவட்ட சுகாதாரத்துறையினர் தினமும் மூன்று முறை நேரடியாக சந்தித்து அவர்களின் உடல் நலனை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் இறைச்சி சாப்பிடுபவர்களே அதிகம் தாக்கும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் சில வகை இறைச்சி ரகங்களை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: பொதுவாகவே வைரஸ்கள் வெயில் அதிகம் இருக்கும் போதும், அதிக வெப்பநிலையிலும் இறந்து விடும். இதில் கொரோனா வைரஸ் எப்படிப்பட்ட வெப்பத்தை தாங்கும் என்பதை உறுதி செய்ய சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை கையாள வேண்டும். குறிப்பாக பன்றிக்கறியில் கிருமிகள், வைரஸ்கள் அதிகம் இருக்கும். பன்றி இறைச்சியை எவ்வளவு அதிகமான சூட்டில் வேக வைத்தாலும் அதற்குள் உள்ள வைரஸ்களோ கிருமிகளோ சாகாது. அதேபோல் ஆட்டு ரத்தத்தில் அதிகளவு கிருமிகள் இருக்கும். சாதாரணமாக அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஆட்டு ரத்தத்தை பொறித்து சாப்பிடும் வழக்கம் உண்டு. ஆட்டு ரத்தத்தில் உள்ள கிருமிகள் எவ்வளவு அதிகமான சூட்டிலும் சாகாது என்பதே உண்மை. அதேபோல் ஆட்டு ஈரல், சுவரொட்டி இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சில காலத்திற்கு ஆட்டு குடல், இரைப்பைகளை சாப்பிடுவதை கூட நிறுத்தினால் நல்லது.

அதேபோல் கைகளை தினமும் 30 முறை லிக்விட் போட்டு கழுவ வேண்டும். சோப்பு போடக்கூடாது. சோப்பினை ஒருவர் கையில் தேய்க்கும் போது, கையில் உள்ள கிருமி சோப்பில் ஒட்டியிருக்கும். இதனை மற்றவர்கள் பயன்படுத்தும் போது பரவும் வாய்ப்பு அதிகம். இதனால் லிக்குவிட் தான் பாதுகாப்பானது. 30 முறை கை கழுவ முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 13 முறை கை கழுவ வேண்டும். மணிக்கட்டு வரை கைகளை கழுவ வேண்டும். முழங்காலுக்கு கீழே உள்ள கால்களையும் நன்கு கழுவ வேண்டும். மூக்கு பகுதியில் இயற்கையான பில்டர் உண்டு. மூக்கின் உள்பகுதியில் உள்ள முடி அதிகளவு வளர்ந்தால் மட்டுமே வெட்ட வேண்டும். மற்றபடி மூக்கின் உள்பகுதியில் பில்டர் செய்ய உதவும் முடிகளை அடிக்கடியோ இல்லை சுத்தமாகவோ வெட்டி அகற்றுவதும் தவறு. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிக, மிக எளிது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்த ஒரு தெளிவு உருவாகும் வரை மக்கள் கவனமாக இருப்பது ஒன்று தான் சிறந்த தீர்வு. சளி, இருமல், தடுமம், காய்ச்சலுக்கு எக்காரணம் கொண்டும் சுயமான சிகிச்சை பெறவே கூடாது. டாக்டர்களை ஆலோசித்தே மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : doctors ,
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...