ஒட்டன்சத்திரம், பிப். 12: ஒட்டன்சத்திரம் விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமை வகித்தார். ஏலத்தில் சட்டையப்பனூர், பலக்கனூத்து, வாடிப்பட்டி, சக்கம்பட்டி பகுதிகளிலிருந்து விவசாயிகளும், தாராபுரம், பழநி, திண்டுக்கல், உடுமலை பகுதிகளிலிருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.பருத்தி அதிகபட்ச விலையாக ரூ.5750, 5500, 5350, 5100 ஆகிய விலைகளில் தீர்வை செய்யப்பட்டது. இதில் மேலாளர் தயாளன், மேற்பார்வையாளர் அருண்பிரகாஷ், அங்காளஈஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலே ஒட்டன்சத்திரத்தில் மட்டும்தான் பருத்தி ஏலம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.