×

மூதாட்டியிடம் நகை அபேஸ் மர்மநபர்களுக்கு வலை

பல்லாவரம், பிப்.12: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (70). நேற்று முன்தினம் சரஸ்வதி, பல்லாவரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார். அனகாபுத்தூர் அரசுபள்ளி அருகே சென்றபோது, ஆட்டோவில் வந்த 3 பேர், அப்பகுதியில் கலவரம் நடப்பதாக கூறி, அவரது நகைகளை பிளாஸ்டிக் கவரில் மடித்து கொடுத்தனர். வீட்டுக்கு சென்ற சரஸ்வதி, அதை பிரித்து பார்த்தபோது, கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

Tags :
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...