க.பரமத்தி, பிப்.10: க.பரமத்தி அருகே நோய் வீரக்தியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டர். க.பரமத்தி அடுத்த குப்பம் அருகே உப்புபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி(70). விவசாயி. இவர் மூட்டு வலியால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த இவர் பூச்சிகொல்லி மாத்திரைகளை தின்று மயங்கிக் கிடந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.