×

துடியலூர் அருகே யானை தாக்கி கண்டக்டர் காயம்

கோவை, பிப்.11:  கோவை துடியலூர் அருகேயுள்ள கொண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (48). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன் தினம் மாலை பணி முடிந்து, ஆனைகட்டி கூட்டுபுளிக்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆனைகட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து அவர், வீட்டிற்கு வனப்பகுதி ரோட்டில்  நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த யானை வழிமறித்து தும்பிக்கையால் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த ரங்கராஜை அந்த பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dudiyalur ,
× RELATED பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர்...