×

புதிய பஸ்கள் தொடக்க விழா

சிவகங்கை, பிப். 7: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார்பில் புதிய பஸ்கள் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பணியின் போது மறைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களான ஒரு ஓட்டுநர், 15 நடத்துநர் என மொத்தம் 16 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செந்தில், துணை மண்டல மேலாளர்கள் பாலசுப்பிரமணியன், சுந்தரபாண்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், உதவி மேலாளர் நாகராஜன், கோட்ட மேலாளர் நலங்கிள்ளி, உதவி மேலாளர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ceremony ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா