×

சோழவந்தான் அருகே சுவர் இடிந்து தம்பதி படுகாயம்

சோழவந்தான், பிப். 7: சோழவந்தான் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி படுகாயமடைந்தனர். சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அண்ணா (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (27). நேற்று இருவரும் தங்களுக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டனர். அப்போது சுமார் 6 அடி உயரமான ஒருபுற மண் சுவர் திடீரென கணவன், மனைவி மீது சாய்ந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது இருவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்து கிடந்தனர். உடனே இருவரையும் மீட்டு விக்கிரமங்கலம் அரமு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி முடிந்த பின் மேல்சிகிச்சைக்காக இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் எஸ்ஐ வெற்றிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Wall ,Cholavandan ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை