சோழவந்தான், பிப். 7: சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோயிலில் பிரதோஷ விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பிரளயநாதர் சுவாமி, பிரளநாயகி அம்மன், நந்தீஸ்வரர், சனீஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி கோயிலை வலம் வந்தனர். அர்ச்சகர்கள் ரவி, பரசுராம், ஐயப்பன் பூஜைகள் நடத்தி பிரசாதம் வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்காளர் சுசீலாராணி, எம்விஎம் குழும தலைவர் மணிமுத்தையா, தொழிலதிபர் வள்ளிமயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய ஈஸ்வரமுடையார் கோயில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.