×

உவரியில் கடலில் மூழ்கிய மாணவர் மாயம்

திசையன்விளை, பிப். 7: உவரி கடலில் குடும்பத்தினருடன் குளித்த பிளஸ் 2 மாணவர் அலையால் இழுத்துச் செல்லப்பட்டார். மாயமானவரை போலீசார் தேடிவருகின்றனர்.குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் உவரி வந்திருந்தார். இவரது மகன் அருள் (17). மணப்பாடு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.அனைவரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன் கடலில் நீராடினர். அப்போது எதிர்பாராதவிதமாக அருள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல்படை உதவி ஆய்வாளர் கோபி மற்றும் போலீசார் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

Tags : Uri ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...