×

சாலை விபத்தில் உயிருக்கு போராடிய மாணவனை காப்பாற்றியவருக்கு ரொக்கப்பரிசு

* போலீசார் வழங்கினர்

தண்டராம்பட்டு, பிப்.4: சாலை விபத்தில் உயிருக்கு போராடிய மாணவனை காப்பாற்றியவருக்கு போலீசார் ரொக்கப்பரிசு வழங்கினர். தண்டராம்பட்டு அடுத்த மேல் பாச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் சிவா(15). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் உட்பட மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வரும்போது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 நபர்கள் உயிரிழந்தனர்.

மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவாவை மனிதாபிமானத்தோடு காப்பாற்றிய தானிப்பாடி மணிகண்டனுக்கு தானிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, எஸ்ஐ நசுருதீன் மற்றும் போலீசார் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாயை நேற்று வழங்கினர்.

Tags : survivor ,student crash ,road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு