×

கரூர் அடுத்த நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை விழா

கரூர், பிப்.4: கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் அனைத்து கிராமங்களும் சுபிட்சமாக இருக்கவும், குலம், தொழில் தழைக்கவும், தொழில் மேம்பாடு, விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டியும் செல்லாண்டியம்மனுக்கு திரளான அர்ச்சகர்களை கொண்டு லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்றது.  இதையொட்டி அம்மனுக்கு 17 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : ceremony ,Laksharchana ,temple ,Noel Chellaandiamman ,Karur ,
× RELATED தேனி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில்...