×

தொழிலாளி தற்கொலை

குளத்தூர், பிப். 4: வேம்பார் ரோச்பாளையம் தெருவை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். (41). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. கடந்த சில மாதங்களாக வேலையின்றி இருந்து வந்த லட்சுமணபெருமாள் வட்டிக்கு கடன் வாங்கி செலவழித்து வந்துள்ளார். கடன் பிரச்னை காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று காலையில் கணவன் -மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த லட்சுமண பெருமாள், வீட்டின் உள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.     தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : Worker suicide ,
× RELATED தொழிலாளி தற்கொலை