×

காடையாம்பட்டி அருகே வாலிபர் தற்கொலை

காடையாம்பட்டி, பிப். 4: தொப்பூர் உப்பாரப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் உமாசங்கர்(21). இவர் அதே பகுதியில் கடைகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை காடையாம்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை பின்புறம், மதுவில் விஷம் கலந்து குடித்து உமாசங்கர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீவட்டிப்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும், உமாசங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Youth suicide ,Kadayampatti ,
× RELATED காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி...