×

ராஜபாளையத்தில் மந்தகதியில் நடக்கும் பாலம் சீரமைப்பு பணி போக்குவரத்துக்கு இடையூறு

ராஜபாளையம், பிப்.4: ராஜபாளையத்தில் மழைநீர் வரத்து ஓடையில் பாலப் பணி மந்தமாக நடப்பதால், விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் நகராட்சியில் சங்கரன்கோவில் முக்கிலிருந்து அம்பலப்புளி பஜார் செல்லும் சாலையில், மழைநீர்வரத்து ஓடைப் பாலம் உள்ளது. இந்த ஓடைப்பாலத்தையொட்டி ஆங்காங்கே தெருக்களில் மெகா பள்ளங்கள் உருவானது. இதை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் இருந்தனர். இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பாலத்தையொட்டி தெருக்களில் பள்ளம் ஏற்பட்ட பகுதியை இடித்து சீரமைப்பு பணிகளை தொடங்கினர். ஆனால், இந்தப் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், பாலம் முழுவதையும் இடித்துவிட்டு புதிதாக பாலத்தை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நீர்வரத்து ஓடையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் அதிகமாகச் செல்வதால், பாலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இந்த பாலத்தில் போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில், பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை