×

சோழவந்தான் அருகே வாழை சாகுபடி பயிற்சி முகாம்

சோழவந்தான், பிப். 4: சோழவந்தான் அருகே நெடுங்குளத்தில் விவசாயிகளுக்கு வாழை சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை துறை, மதுரை வேளாண்மை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு சிறுமலையாறு உப வடிநீர் பொறுப்பு அலுவலர்  பழனிக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பியுலா,சுரேஷ்,கல்பனா முன்னிலை வகித்தனர். தொழில்நுட்ப வல்லுனர் முருகன் வரவேற்றார். தொடர்ந்து புதிய தொழில் நுட்பத்தில் வாழை சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Banana Cultivation Training Camp ,Cholavandan ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை