ஒட்டன்சத்திரம், பிப்.4: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யாவின் ஆலோசனைப்படி நெருங்கி வரும் கோடைகாலத்தையொட்டி ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் தீயணைப்பு நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவசர காலங்களில் ஏற்படும் தீயை எப்படி அணைப்பது. வனவர்களுக்கு வனப்பகுதியில் தீ ஏற்படாமல் தவிர்ப்பதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து செயல்விளக்கம் மூலம் எடுத்துக்கூறப்பட்டது.
இதில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.