×

சேவூர் விற்பனைக் கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, பிப். 4:   அவிநாசி அருகே உள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்  நடைபெற்றது.   அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் சென்ற வாரத்தைவிட, நிலக்கடலை வரத்து குறைந்து இருந்தது.  இதனால், நிலக்கடலை விலை அதிகரித்தது. நிலக்கடலை ஏலத்திற்கு, மொத்தம் 201 நிலக்கடலை மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் நிலக்கடலை குவின்டால் ஒன்றுக்கு முதல் ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.4,900 முதல் ரூ.5,105 வரையிலும், இரண்டாவது ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.4,650 முதல் ரூ.4,720 வரையிலும், பச்சை ரக நிலக்கடலை  ரூ.4,240 முதல் ரூ.4,360 வரையிலும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு ஏலம் நடந்தது.

 இதில் தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், அன்னூர், மங்கரசவலையபாளையம், புளியம்பட்டி, மணியக்காரன்பாளையம், சேவூர், நம்பியூர், போத்தம்பாளையம், புலிப்பார், கரடிவாவி,  மலையப்பாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து 18 விவசாயிகளும், திருச்செங்கோடு, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 6 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

Tags : Groundnut auction ,
× RELATED அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்...