×

திருமணம் செய்து வைக்க கோரி அம்பை கோர்ட்டில் வாலிபர் மனு

அம்பை, ஜன. 31: கல்லிடைக்குறிச்சி அருகே கீழஏர்மாள்புரத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி மகன் பரமசிவன் (34). இவர், அம்பை நீதிமன்றத்தில் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: எனது தாயார் இறந்து விட்டார். தந்தை பூதப்பாண்டிக்கு கோடி கணக்கில் சொத்துகள் உள்ளது. ஆனால் நான், பிச்சை எடுத்து நானே சமையல் செய்து ஜீவித்து வருகிறேன். எனக்கு திருமணம் செய்து வைக்காமல் ஆள் வைத்து கொல்ல தந்தை முயற்சிக்கிறார். இவ்வாறு கூறியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த அம்பை குற்றவியல் நீதிமன்ற நடுவர்(பொறுப்பு) பழனி, இலவச சட்ட உதவி ஆணை குழுவில் மனு செய்து பரிகாரம் தேடி கொள்ளுமாறு அனுப்பினார்.

Tags : Plaintiff ,Court of Appeal ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...