ஓட்டப்பிடாரம், ஜன. 30: புதியம்புத்தூர் அருகே புதுப்பச்சேரிைய சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி செல்வபாக்கியம் (65). இவர், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் சடலமாக மிதந்தார். புதியம்புத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். அவரது தலையில் ரத்த காயமும், சேலையில் கல்லைக்கட்டி கிணற்றில் உடல் வீசப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த செல்வபாக்கியத்தின் அக்கா மகன் பெருமாள்சாமி(46), ஜம்புலிங்கபுரம் விஏஓ கதிர்வேல் முன்னிலையில் நேற்று முன்தினம் சரணடைந்தார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது: செல்வபாக்கியமும் எனது தாயார் ராஜபுஷ்பமும்(70) சகோதரிகள். இருவரும் எனது தந்தை மாரியப்பனை திருமணம் செய்து கொண்டனர். எனக்கு இரு சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். சித்தி செல்வபாக்கியத்திற்கு ஒரு மகன் உள்ளார். நான், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரே உள்ள கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன்.