×

புதியம்புத்தூர் அருகே கிணற்றில் சடலமாக மீட்பு சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசினேன் சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ஓட்டப்பிடாரம், ஜன. 30: புதியம்புத்தூர் அருகே புதுப்பச்சேரிைய சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி செல்வபாக்கியம் (65). இவர், கடந்த 20ம் தேதி அப்பகுதியில் உள்ள தோட்டத்து  கிணற்றில் சடலமாக மிதந்தார். புதியம்புத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். அவரது தலையில் ரத்த காயமும், சேலையில் கல்லைக்கட்டி கிணற்றில் உடல் வீசப்பட்டதும் தெரியவந்தது.  இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த செல்வபாக்கியத்தின் அக்கா மகன் பெருமாள்சாமி(46), ஜம்புலிங்கபுரம் விஏஓ கதிர்வேல் முன்னிலையில் நேற்று முன்தினம் சரணடைந்தார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது: செல்வபாக்கியமும் எனது தாயார் ராஜபுஷ்பமும்(70) சகோதரிகள். இருவரும் எனது தந்தை மாரியப்பனை திருமணம் செய்து கொண்டனர். எனக்கு இரு சகோதரர்களும், 3 சகோதரிகளும் உள்ளனர். சித்தி செல்வபாக்கியத்திற்கு ஒரு மகன் உள்ளார். நான், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரே உள்ள கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன்.

எங்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை செல்வபாக்கியம், ராஜபுஷ்பம் ஆகியோருக்கு தலா 3 ஏக்கராக பிரித்து தந்தை உயில் எழுதி வைத்துள்ளார். இதனை மறைத்து செல்வபாக்கியம், மொத்த நிலத்திலும் விவசாயம் செய்து வந்தார். இந்த விவரம் தெரிந்ததும் நான், சித்தி செல்வபாக்கியத்திடம் சென்று கேட்டேன். அப்போது எங்களுக்குள்  தகராறு ஏற்பட்டது.  ஆத்திரமடைந்து மண்வெட்டி கணையால் செல்வபாக்கியத்தின் தலையில் தாக்கினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை எடுத்துக் ெகாண்டு சேலையில் உடலுடன் கல்லைக் கட்டி அங்குள்ள கிணற்றில் வீசினேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இதையடுத்து விஏஓ அளித்த புகாரின்பேரில், பெருமாள்சாமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : Survivor ,Siddhi ,
× RELATED நண்பனை கொன்றவர்களை பழிவாங்க வாளுடன் சுற்றிய வாலிபர் கைது