×

நண்பனை கொன்றவர்களை பழிவாங்க வாளுடன் சுற்றிய வாலிபர் கைது

மதுரை, ஏப்.16: நண்பனை கொலை செய்தவர்களை பழிக்கு பழிவாங்க வாளுடன் சுற்றியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய எஸ்ஐ அன்புதாசன் தலைமையிலான போலீசார் சோலையழகுபுரம், சித்தி விநாயகர் கோயில் தெரு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில் அவர், சோலையழகுபுரம் 4வது தெருவைச் சேர்ந்த சசிகுமார்(24) எனத் தெரிந்தது. தொடர் விசாரணையில் தனது நண்பரான ஆனந்த் என்பவர் கடந்தாண்டு சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டதும், அவரை கொலை செய்தவர்களை பழிக்கு பழி வாங்க வாளுடன் சுற்றியதாகவும் போலீசாரிடம் சசிகுமார் தெரிவித்தார். இதையடுத்து வாளை பறிமுதல் செய்த போலீசார், சசிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நண்பனை கொன்றவர்களை பழிவாங்க வாளுடன் சுற்றிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,SI Anbudasan ,Jaihindpuram Police Station ,Siddhi Vinayagar Temple Street ,Solayaghapuram ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை